Saturday 9 September 2017

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய 125 ஆம் ஆண்டு - Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary

நாளை (11.09.2017) சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோவில் நம் பாரதம் பற்றியும் இந்துமதம் பற்றியும் உரை நிகழ்த்திய 125 ஆம் (1893 - 2017) ஆண்டு பெரு நிகழ்வு ! 
Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary (11.09.1893)

இந்நேரத்தில் நாம் இரண்டு தமிழர்களை நினைவில் கொள்ள வேண்டும் ...
தனக்கு வந்த அழைப்பை சுவாமி விவேகானந்தரிடம் கொடுத்து தனக்கு பதில் அமெரிக்காவில் நடக்கும் சர்வ சமய மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு பொருளுதவியும் செய்த ராமநாதபுரம் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி !

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க செல்ல பலரிடம் பொருளுதவி பெற்றுத்தந்த திரு.அளசிங்கர் ! , அளசிங்கர் விவேகானந்தருக்கு பல்வேறு உதவிகளை மிகுந்த அன்போடு செய்தவர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து அளசிங்கருக்கு எழுதிய கடிதம் இன்றும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கல்வெட்டாக காட்சிக்கு உள்ளது !
அ.பரிவழகன்

#SwamiVivekananadaChicagoTalk125thAnniversary


No comments:

Post a Comment