Thursday 27 February 2014

எதிர்த்து நில்; உறுதியாக !


ஒருபுறம் குளம்மறுபுறம் உயரமான சுவர்வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர்பின்னால் ஏதோ சப்தம்திரும்பிப் பார்த்தார்பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தனஇப்போது என்ன செய்வது?

குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார்குரங்குகள் அவரை விடுவதாக இல்லைஅவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தினதிடீரென்று ஒரு குரல் கேட்டதுமுன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது...   

"குரங்குகளைக் கண்டு ஓடாதேஎதிர்த்து நில்உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறுபிறகு என்ன நடக்கிறது என்று பார்?''

விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார்குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார்குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர்அவை அவரைத் தொடரவில்லைஅச்சத்தோடு தயங்கி நின்றனமெல்லப் பின்வாங்கினபிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.

விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனேஅந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளேசோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.

தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும்சோதனைகளைக் கண்டு அஞ்சாதேசோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''


விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்லஉடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.'நாள்தோறும் கால்பந்து விளையாடுகீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்என்று சொன்னவர் அல்லவா


அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவைஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றனஇன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

Wednesday 26 February 2014

மென்பொருள்...

இன்று மென்பொருள் நிறுவனங்களில்(சாப்ட்வேர்) பணி புரியும் பெண்களின் பாதுகாப்பு  குறித்து சிந்திக்கும் நேரம் இது...

பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் தான் இந்த மென்பொருள் நிறுவனங்களில் அதிகமாக பணிபுரிவதால், இந்த நிறுவனங்களில் எந்த பிரச்சனை வந்தாலும் இவர்கள் தங்களின் குடும்பத்திற்காக அவற்றை சகித்துக் கொள்கின்றனர்,இதனால் தங்களுக்கு இருக்கும்,எற்படும்  ஆபத்தை கூட உணராமல் இருகின்றனர்.

மென்பொருள் நிறுவனங்களில் இரவு நேர சிப்டில் பணிபுரியும் அனைவரும் தங்களுக்கென்று வழங்கப்படும் வாகனத்தில் (cab) பயணம் செய்வது நல்லது...நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

இனியாவது நாம் பெண்களின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

Friday 21 February 2014

வேண்டாம் பிளாஸ்டிக்... Save Earth From Plastics...


வருங்காலத்தில் உலகம் குறிப்பாக இந்தியா சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சுகாதார சீர்கேடு...

இன்று "அணுகுண்டை விட ஆபத்தானதாக மாறிவிட்டது பிளாஸ்டிக் குப்பை" நாம் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம் இதனால் வரப்போகும் தீமையை அறியாமல் இருக்கிறோம், நம் வீட்டில் அலுவலகத்தில் இருந்து தினமும் வெளியேறும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நமக்குத் தெரியாது அனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்க 1000 ஆண்டுகள் ஆகும். 

நாம் ஒவ்வருவரும் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான பூமியை விட்டு செல்கிறோமா? சிந்திப்பீர்...தவறு நம் அனைவரின் மீதும் உள்ளது...

Say No To Plastics...