Saturday 20 December 2014
Monday 15 December 2014
" மாதங்களில் நான் மார்கழி "
" மாதங்களில் நான் மார்கழி "
- ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா-
(ஸ்ரீ மத் பகவத் கீதை - 10:35)
தொடங்கிவிட்டது மார்கழி மாதம் ! (இன்று முதல் -16.12.2014)கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்" (3 வது பாடல் )
ஒருநாளின் ஒவ்வொரு மணித்துளியும் இறைவணக்கத்துக்கு உகந்தது என்றாலும் குறிப்பிட்ட நாழிகைகளை மட்டும் இறைவனுக்கென்றே ஒதுக்கியிருப்பார்கள். அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இறைவணக்கத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நேரம்.
புள்ளினங்கள் கவிபாடி உலகத்தைத் துயிலெழுப்பும் அதிகாலை, அற்புதமானது. மனதில் சலனங்கள் ஏதுமின்றி இறைவனோடு ஒன்றுவதற்கு ஏற்ற பொழுது, இதைவிட வேறென்ன இருக்கமுடியும்? அதனால்தான் அந்த அதிகாலைப் பொழுதை ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று முதன்மைப்படுத்தினார்கள்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. அந்த மாதத்தில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதேநேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
மார்கழியில் அதிகாலை துயிலெழுவதும், வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் நல்லவண்ணமாய் இருக்கும். அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வன்மைப்படுத்தும்.
மார்கழியில் சுபநிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. குடியானவர்கள், தை மாதத்தில் வருகிற பொங்கலுக்குத் தேவையான தானியங்களையும், கரும்பு, மஞ்சள் முதலான பொருட்களையும் அறுவடை செய்து வீடுகளுக்குக் கொண்டுவரும் பணியில் மார்கழி மாதம் முழுவதும் செலவிடுவார்கள். அதனால் அந்த மாதத்தில் சுப நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுபநிகழ்வுகளைத் தவிர்த்த மக்கள், இறைவழிபாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்கியிருப்பதும் இந்த மார்கழி மாதம்தான்.
"காதலன் கண்ணனையே கணவனாகப் பெற்ற பக்தை ஆண்டாள்"
ஆண்டவனையே அன்பால் ஆண்டதால் கோதை நாச்சியார் ,
"ஆண்டாள்" என்று அழைக்பெற்றார்
Thursday 11 December 2014
ஜுன் 21 சர்வதேச யோகா தினம் ! June 21 International day of Yoga !
பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்து அதற்கான தீர்மானம் பொதுச்சபையில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பிரதமரின் கோரிக்கையை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது மட்டுமல்லாது. யோகாவிற்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது !
ON behalf of INDIA Prime Minister Narendra modi request UN to declare June 21 as International day of Yoga, with support from majority of 175 nations, UN Declared June 21st as International day of Yoga !
Wednesday 10 December 2014
Tuesday 9 December 2014
பாரதம் எங்கள் தாய் நாடு ! INDIA is our NATION
தமிழ் ஈழப் பிரச்சனையை, காஷ்மீர் விவகாரத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு...
காஷ்மீருக்கு நாம்,நம் அரசு கொடுத்துள்ள சலுகைகள், செய்துள்ள வசதிகள் ஏராளம்...கஷ்மீரில் வெள்ளம் வந்தபொழுது நாம் தான் ஓடிச்சென்று காப்பற்றினோம், வேறு யாரும் இல்லை
... காஷ்மீர் என்றுமே நம் நாட்டின் ஒரு பகுதிதான், இது தான் தமிழ் மக்களின் எண்ணம். ஈழத்தைக் காரணம் காட்டி,காஷ்மீர் பிரிவினை பேசுவதை தமிழ் மக்கள் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்.
"சலுகைகள் கொடுத்தது,கொடுப்பது சுதந்திரத்தை அனுபவிக்கத் தான், பிரிவினை வாதிகளோடு சேர்ந்துகொண்டு காஷ்மீரை அழிப்பதர்க்கல்ல..."
தினம் தோறும் நம் ராணுவ வீரர்கள் பலர் கஷ்மீரைக் காப்பதர்காக உயிரைத் தியாகம் செய்கின்றனர்...பிரிவினை பேசி அவர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்
... PLEASE.......
"இந்திய பிரிவினையைத் தூண்டும் எந்த ஒரு அமைப்பையும் , கட்சியையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், யார் நினைத்தாலும் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது, அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்."
இமயம் முதல் குமரி வரை இந்தியா என்றுமே ஒரே நாடு தான் !
இது எங்கள் தேசம் !
இது எங்கள் மண் !
இது எங்கள் விவேகானந்தனும்,பாரதியும் பிறந்த நாடு !
இது எங்கள் புண்ணிய பூமி !
இது எங்கள் ஞான பூமி !
Saturday 15 November 2014
Kiss of Love - IIT MADRAS ல் (சென்னை) நடந்த அவலம் !
நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான IIT MADRAS ல் (சென்னை) நடந்த அவலம் !
நாட்டில் போராட்டம் நடத்த வேண்டிய எத்தனையோ பிரச்சனைகள், அவலங்கள் இருக்க "கட்டிப் பிடிக்க, முத்தம் கொடுக்க " ஒரு போராட்டமா ? ஆணும் பெண்ணும் தனிமையில் அன்பை பகிர்ந்து கொள்வது தானே உண்மையான அன்பின் வெளிப்பாடு, அதுதானே இயற்கையின் நியதி, நடுரோட்டில் ; கல்லூரி வளாகத்தில் அன்பை வெளிப்படுத்தினால், மனிதனுக்கும்; மிருகத்திற்கும் என்ன வித்யாசம் ?
Tuesday 11 November 2014
திருக்குறள்...Thirukural...
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
படிக்கவேண்டிய புத்தகங்கள்
ஸ்ரீ மத் பகவத் கீதை
திருவாசகம்
திருக்குறள்
Friday 24 October 2014
தமிழ் "தி இந்து" - பரிவழகன்'ஸ் "எங்கள் சாய்ஸ்"
தமிழ் "தி இந்து" நாளிதழில் இன்று (24.10.2014) வெளியான "இளமை புதுமை" பகுதியில் எங்கள் சாய்ஸ் இடத்தில் வெளியான என்னுடைய "எங்கள் சாய்ஸ்" விருப்பம் ...
Tuesday 21 October 2014
இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள்...HAPPY DIWALI 2014...
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள் ...
அனைவரின் வாழ்விலும் "இருள் நீங்கி ஒளி பரவட்டும்"...
நாட்டில் "அதர்மம் அழிந்து தர்மம் நிலை பெறட்டும்"...
இந்த தீப ஒளி திருநாள் அனைவரின் வாழ்விலும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் "ஒரு படி முன்னேற்றம்" அடைய ,"ஒரு அடி முன்நோக்கி நடக்க" வழி வகுக்கட்டும் ...
அந்த பரம்பொருள் , பரமாத்மா , ஸ்ரீ கிருஷ்ணனின் அருட்கொடை மழையாக அனைவரின் வாழ்விலும் பொழியட்டும் ...
இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள் ...
அனைவரின் வாழ்விலும் "இருள் நீங்கி ஒளி பரவட்டும்"...
நாட்டில் "அதர்மம் அழிந்து தர்மம் நிலை பெறட்டும்"...
இந்த தீப ஒளி திருநாள் அனைவரின் வாழ்விலும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் "ஒரு படி முன்னேற்றம்" அடைய ,"ஒரு அடி முன்நோக்கி நடக்க" வழி வகுக்கட்டும் ...
அந்த பரம்பொருள் , பரமாத்மா , ஸ்ரீ கிருஷ்ணனின் அருட்கொடை மழையாக அனைவரின் வாழ்விலும் பொழியட்டும் ...
இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள் ...
HAPPY DIWALI 2014 ...
Monday 13 October 2014
"தமிழர் தலைவன் இராமன்" My Tamil Talk ...
"பொற்றாமரை" கலை இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சி சென்னை (11.10.2014)
என் உரையின் தலைப்பு : "தமிழர் தலைவன் இராமன்"
இலக்கிய, வரலாற்று ஆதரங்களுடன் ... Click Below Link ...
Saturday 4 October 2014
ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே மேடையில் ! BJP and Congress Celebrates Dasara pooja !
வேறு வேறு சித்தாந்தங்கள்; வேறு வேறு கொள்கைகள்; வேறு வேறு பாதைகள் ; என என்னதான் அடித்துக் கொண்டாலும் , விழாக்களில் ஒற்றுமையாக ஒன்றுகூடும் நம் தலைவர்களுக்கு, நம் வாழ்த்துகள் ...
இதற்காகவாவது வேண்டும் விழாக்கள் ...
" தசரா விழாவில் பாரத பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்
சோனியா "ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே மேடையில் !
சோனியா "ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே மேடையில் !
தமிழ்நாடு என்று விழிக்குமோ ?
Friday 3 October 2014
Thursday 2 October 2014
மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ? Why Modi Gifted GITA to Obama ?
மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ?
பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது, அவருக்கு 'காந்தியின் பார்வையில் கீதை' என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார் (பிரதமர் மோடி ஒபாமாவுக்கு பல்வேறு பரிசுகளை கொடுத்தார். இதில் சிறப்பான பரிசாக காந்தி விளக்கவுரை எழுதிய பகவத்கீதை புத்தகத்தை கொடுத்தார். இந்த புத்தகம் காதியில் பொதியப்பட்டு , இதற்கு மேல் சில்க் துணி வேயப்பட்டு கொடுத்தார்). இந்த மண்ணின் பொக்கிஷங்கள்
- இராமாயணம்; மகாபாரதம்
தென் நாட்டவரின் சிறந்த நூல்கள் வட நாட்டவருக்குத் தெரியாது வட நாட்டவரின் சிறந்த நூல்கள் தென் நாட்டவருக்குத் தெரியாது, ஆனால் நம் நாட்டில் அனைவரும் அறிந்த, அனைவருக்கும் புரிந்த, சிறந்த இதிகாசங்கள் இராமயணமும், மகாபாரதமும். சிறு குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லும் ஸ்ரீராமனின் கதையை ! இராமயணமும், மகாபாரதமும் எம் தேசத்து மக்களோடும், இம் மண்ணோடும் கலந்து விட்ட இதிகாசங்கள் ! இது மதநூல் மட்டுமல்ல இம் மண்ணின், இக் கலாச்சாரத்தின் கதை ! இந்தியா வேறு இராமாயணம் வேறு அல்ல, இந்தியா வேறு மகாபாரதம் வேறு அல்ல.
"1997 ஜூன் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் ரோமுக்கு
சென்றிருந்த போது போப்பாண்டவருக்கு பகவத் கீதையை பரிசளித்தார்"
Subscribe to:
Posts (Atom)