Saturday, 23 August 2014

04.01.2014 அன்று நடந்த "பாரத மண்வாசனை" இலக்கிய நிகழ்ச்சி
அமைப்பாளர்: நண்பர் வீர.திருநாவுக்கரசு.

சான்றோர்கள் : 
பா.. மூத்த தலைவர் அய்யா இல.கணேசன்; 
மூத்த பத்திரிகையாளர் அய்யா சுப்பு; 
முனைவர் பேராசிரியர் அய்யா .வே.சு; 
பேராசிரியர் அய்யா சாமி தியாகராஜன் .




Thursday, 14 August 2014

சும்மாவா வீசிற்று சுதந்திரக் காற்று ?

நம் நாட்டை ஆண்ட மன்னர்களிடமோ ஒற்றுமை இல்லை, மக்களிடமோ அந்நியரை எதிர்க்க சரியான வழிகாட்டுதலில்லை, இயலாமை , கொடிய வறுமை , பயம் இப்படி பல காரணங்கள் ... எப்படியிருந்தாலும் விடுதலை பெற்றுத்தானே ஆகவேண்டும் ?

விடுதலை வேட்கையோடு களமிறங்கிய காளையர்கள் பலர், நம்மிடமோ கத்தியும், வேலும் , வில்லும் ,ஈட்டியும், சூலமும்...அந்நியரிடமோ துப்பாக்கியும், பீரங்கியும், வெடிகுண்டும்...இருந்தபோதும் துப்பாக்கியைத் துச்மென்றும், வெடிகுண்டை வெத்து வேட்டு என்றும் நினைத்துத் தம் உயரை மாய்த்துக் கொண்டவர் பலர் .

"அகிம்சை வழியே சிறந்தது" என்றார் காந்தி, "இரத்தம் கொடுங்கள் சுதந்திரம் பெற்றுத் தருகிறேன் " என்றார் நேதாஜி, இருவேறு பாதைகள் ஆனால் நோக்கம் ஒன்றுதான், அது பூரண சுதந்திரம் !

நம் மக்களிடமே நம் நாட்டைப்பற்றி இருந்த தவறான, கீழான, எண்ணங்களை, "நம்மால் சுதந்திரம் பெற முடியாது" என்று துவண்டு கிடந்த மனிதர்களைத் தன்னம்பிக்கையோடு "எழுமின்" என்றும், சாதியக்கொடுமைகள் முதல் பெண்ணடிமை வரை, அத்துனை ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்தெறிந்து நாட்டு விடுதலை ஒன்று தான் முக்கியம், "இந்தியா உலகின் குருவாக மாறும், பாரத அன்னை மீண்டும் தலை நிமிர்வாள்"    என்றார் வீரத் துறவி விவேகானந்தர்.    

இப்படி எண்ணற்ற தலைவர்களின் எண்ணத்தில், கனவில் , உயர்த்தியாகத்தில், கண்ணீரில், இரத்தத்தில் கிடைத்தது தான் நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம்!


சும்மா வீசிவிடவில்லை சுதந்திரக் காற்று !   

"இரத்தத்தை வியர்வையாகச் சிந்திஉயிரை துச்சமென எண்ணிபோராடிஅடிபட்டுஉதைபட்டுசிறைசென்றுவதைபட்டுநம் முன்னோர் 
பெற்றுத்தந்தது தான் நம் சுதந்திரம்!"

ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் !

மதத்தில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 
மொழியில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 
உணவில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 

ஆனால் நாம் அனைவரும் "இந்தியர்" என்ற ஒரே தேசிய இனம் !
இமையம் முதல் குமரி வரை இது ஒரே நாடு !
நாம் அனைவரும் ஒரே மக்கள் !

நம்முடைய விழாக்கள் , அடிப்படை திருமண முறைகள் , கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையே ! நம்முடைய நாடு கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டுள்ளது ... அதன் பெயர் ஹிந்து கலாச்சாரம்...இங்கு "ஹிந்து" என்பது மதத்தின் பெயர் அல்ல கலாச்சாரத்தின் பெயர் ... 

சுவாமி விவேகானந்தர் கூற்றுப்படி ஹிந்து என்று சொல்லத்தேவையில்லை "வேதாந்தி" என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு வேதங்களைப் பின்பற்றுபவர் என்று பொருள்.

அரேபியர்களும் இதைத்தான் சொல்கின்றார்கள் ஹிந்து என்பது, ஹிந்து மதத்தை மட்டும் குறிக்கும்சொல்லல்ல அது இந்தியாவைக் குறிக்கும் சொல் என்று !

ஹிந்து என்பதற்கு இந்தியாவில் வாழும் மக்கள், இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் இனம் என்பதுதான் சரியான பொருள் ! இதை முதலில் இங்கு இருக்கும் ஹிந்துக்கள் புரிந்தகொள்ள வேண்டும் !

ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் ! 

Wednesday, 6 August 2014

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !

"கல்வியென்பது அனைவரின் அடிப்படை உரிமை" இன்று அந்த உரிமையை யார் உரிமை கொண்டாடுவது என்பதில் தான் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது. 

தங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை, ஒரு விதத்தில் சரியும் கூட, ஆனால் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தங்களுடைய மகனும்,மகளும் இப்படிதான் ஆகாவேண்டும் என்று எண்ணுவது, விரும்புவது தவறு.

இன்று அனைத்துப் பெற்றோர்களிடமும் தங்களுடைய பிள்ளை பொறியியல் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இதில் தவறில்லை ஆனால் அதே சமயம் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

"பக்கத்துவீட்டு உறவினர் மகள், எதிர்வீட்டு அத்தையின் மகன்,சித்தப்பாவின் பையன்,ஒன்றுவிட்ட மாமாவின் மகன்" பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காகத் தங்களுடைய பிள்ளையும் பொறியியல் படித்தே ஆகா வேண்டும் என்பது சரியல்ல, வலுக்கட்டயமாக அவர்களைப் பொறியியல் படிக்க அனுப்பக்கூடாது. சிலருக்கு இயல்பாகவே பொறியியல் படிப்பின் மீது நாட்டம், ஈர்ப்பு, இருக்கும், சிலர் யாரையாவது (இயல்பாகவே உந்துதல் ஏற்பட்டு) பார்த்து  இவர்கள் போல ஆகா வேண்டும் என்று விரும்புவர். சிலர் ஏதாவது படித்தால் போதும் என்று இருப்பர்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்பே தங்களுடைய பிள்ளையின் விருப்பம், கனவு, இலட்சியம்,போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் அமர்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும், தினந்தோரும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரு அரை மணி நேரமாவது அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் சந்தோசமாக மனம் விட்டு வீட்டு விஷயங்களைப் பற்றி பேசினால் அந்தக் குடும்பத்தில் சண்டை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதனால்த்தான் நம் முன்னோர், அனைவரும் குடும்பத்தோடு  அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் இன்றோ நம்முடைய பொக்கிஷமான பல மணி நேரங்களைத் தொலைக்காட்சிப் பெட்டிமுன் ரிமோட்டின் பிடியில் இழக்கிறோம்.

நாம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசும்போது அவர்களின் உண்மையான விருப்பம் எது, எந்தத் துறையைச் சார்ந்தப் படிப்புகளை அவர்கள் விரும்புகிறார்கள், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளும் தங்கள் விருப்பம் சார்ந்தப்  படிப்பை பெற்றோரிடம் சொல்ல வேண்டும். ஆகா முதலில் பெற்றோரும் பிள்ளைகளும் கலந்து பேசி, சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும், இது தான் முதல் நிலை. பிறகு அதற்கான வழிமுறைகள் என்ன, அந்த படிப்புக்கு என்ன மார்க் (மதிப்பெண்) பெற வேண்டும், இந்தப் படிப்புக்கு எந்த  கல்லூரி சிறந்தது, இந்தப் படிப்புக்கு ஏற்ற பல்கலைக்கழகம் எது என்று முடிவு செய்ய வேண்டும்.   

தமிழகத்தைப் பொருத்தவரையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு கிடையாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. அதே போல தமிழகத்தில் மருத்துவப்படிப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. பொறியியல் மருத்துவ படிப்புகளுக்கு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு கிடையாது.  
சில தனியார் பல்கலைக்கழகங்கள் அவர்களுகென்று தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன அவற்றையும் கவனிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைக்குப் பிடித்த, ஏற்றப் படிப்பு ஏதேனும் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் இருந்தால் அதற்கு ஏதேனும் நுழைவுத் தேர்வு இருக்கிறதா ? எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் ? நம்முடைய நிலையை எப்படி உயர்த்துவது ? என்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
மருத்துவத்தில் விருப்பம் இருப்பவரைப் பொருளாதரத்தில் கொண்டு சேர்ப்பது, கலைத் துறையில் விருப்பம் இருப்பவரை பொறியியலில் சேர்ப்பது, பொறியியலில் விருப்பம் இருப்பவரை சமையல் படிப்பில் சேர்ப்பது எப்படி ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
ஆகா நம்முடைய வாழ்வின் எதார்த்தத்தைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்து, அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளித்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல் வழி காட்டுவது ஒவொரு பெற்றோரின் கடமையாகும்.

ஆல் தி பெஸ்ட்.  

அ.பரிவழகன்                          


Friday, 25 July 2014

தமிழ் அறிவியல் மொழியாக வேண்டும் ! அரசும், நாமும் என்ன செய்ய வேண்டும் ?

தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம், தமிழில் அறிவியல் சார்ந்தப் புத்தகங்கள் வராதவரை தமிழை நாம் வளர்ப்பது கடினம். பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள கருத்துகள், விளக்கங்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும், இதன் மூலம் அந்தத் துறைகளைப் படிப்பவர்களிடம் அந்தத் துறை சார்ந்த புரிதல் அதிகமாக வளரும். ஆங்கிலத்தில் படிக்கும் பாடங்களை அதற்கு இணையாக தமிழில் படிக்கும் பொழுது இன்னும் கூடுதலாக, அதிகமாக அதில் உள்ள கருத்துகள் மனதில் பதியும். 

"யாரையும் நீங்கள் கட்டாயமாகத் தமிழில் தான் படிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை " நாம் ஆகிலத்தில் படிக்கும் பொழுது ஒரு துணை நூல் போல, ஒரு Reference Book  போல தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலைப் பயன்படுத்தலாம். “என்னுடைய ஒரே கருத்து தமிழில் மொழிமாற்றம் செய்தால் அவை நமக்கு எளிதாகப் புரியும், பொறியியலும், மருத்துவமும்  படிப்பதற்கு எளிதானதாக மாறும்”. உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது, எனினும் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்ள, புரிந்து கொள்ள தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டப் புத்தகங்கள் உதவும். இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். 

இன்று பொறியியல் படிப்பவர்களில் பலர் தங்கள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் மிகவும் கஷ்டப்படுகின்றனர், இவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செயப்பட்டப் புத்தகங்கள் உதவும்.  பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது அதில் தவறில்லை அந்நிலை தான் தொடரவேண்டும், உலகத்தோடு தொடர்புகொள்ள இம்முறை தான் உதவும், அதே சமயம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பொறியியல் புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் கொடுத்து அவர்களைப் படிக்க வைத்து  அவர்களின் பாடங்கள்  எளிதில் புரியும் படி செய்தல் வேண்டும். 

ஒரு மாணவனை/மாணைவியை கல்லூரியில் படிக்கவைத்தல் மட்டுமல்ல, படிக்கும் மாணவனின் பாடங்கள் அவனுக்குப் புரியும் படி செய்தாலும் ஒரு அரசினுடைய, பல்கலைக்கழகத்தினுடைய கடமையாகிறது. 
இது நாம்முடைய கடமையும் கூட !

இந்த மாற்றம் தான் நாம் இன்று, நம் தமிழுக்குச் செய்ய வேண்டியது ! 

கவனத்தில் கொள்ளுமா அண்ணாப் பல்கலைக்கழகம் ?
கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு ?   

Sunday, 20 July 2014

நம் பாரத நாடு, பழம் பெரும் நாடு !

"உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு 700 ல் தட்சசீலத்தில் நிறுவப்பட்டது! உலகெங்கிலும் இருந்து சுமார் 10,500 க்கும் அதிகமான மாணவர்கள் 146 க்கும் மேற்பட்ட துறைகளில் இங்கு கல்வி கற்றனர்"

"உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் !
50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இன்றளவும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி !"

"பாரததேசம் ஒரு குட்டி பூகோளம், எத்தனையோ துக்கங்களைத் தாங்கிக்கொண்டும் கணக்கற்ற அதிர்ச்சிகளுக்கு தலை கொடுத்ததும் பாரதம் இன்றளவும் பிழைத்து இருக்கிறது, காரணம் சிறப்பான சாதனைகள் புரியும் ஆற்றல் அதற்கு உண்டு. உலகத்தைக் காப்பதர்காகவே ,பாரதம் இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறது. பாரதம் கொடுக்க இருக்கும் தானத்தைப் பெற, உலகமே காத்திருகிறது                                                                                                                                                                                                              - ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

"தற்கால விஞ்ஞானமும் புரிந்துகொள்ள முடியாத அறிய விஞ்ஞான உண்மைகள் வேதத்தில் உள்ளன" 
                                                                                                              - ஸ்ரீ அரவிந்தர்

"இந்தியா அனைத்து மதங்களின் தாயக இருக்கிறது. இந்தியாவில் அறிவியலும் மதமும் முழுமையான இணக்கத்துடன் என்று செயல்படுகின்றனவோ அன்று இந்தியா உலகின் தாயாக வழிகாட்டும் " 
                                                                                   - ஸ்ரீ அன்னி பெசன்ட் அம்மையார்

"இயேசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டிற்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தபொழுது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள், உயர்ந்த லட்சிய நாகரீக வாழ்க்கை வாழ்ந்து இருகிறார்கள்" 
                                                                                           - மெகாலே, இங்கிலாந்து.
                                                     (இந்தியாவின் கல்விமுறையை தயாரித்தவர்)

Tuesday, 15 July 2014

வேண்டும் "வேத அறிவியல்"

நம்முடைய வேதங்களில்,உபநிதங்களில்,புராணங்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள், அறிவியல் சார்ந்த கருத்துகள்,அறிவியல் சார்ந்த விளக்கங்கள் முதலியனவற்றை நம்முடைய பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்த்தல் வேண்டும். 

இதன் மூலம் நம் முன்னோர்கள் விட்டுப்போன அறிவியல் ஆய்வுகளை நம் இளையதலைமுறை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.நம் நாட்டு ரிஷிகளும்,அறிவுஜீவிகளும் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்குப் பயன்படும்,அது நமக்கு பெருமையாகவும்,பயனுள்ளதாகவும் அமையும். 

இன்று பெரும்பான்மையான மக்கள் யாரும் வேதங்களைப் படிப்பதில்லை (ஏன் ஹிந்துக்கள் இன்று பகவத் கீதையைக் கூட யாரும் ஒழுங்காகப் படிபதில்லை)அதில் இருக்கும் கருத்துகள் நமக்குப் தெரியாமலேயே இருந்து விடுகிறன.அவை குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருப்பதால் நாம் யாரும் அதைப்படிப்பது இல்லை. இதற்கு ஒரே தீர்வு நம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அறிவியல் பாடத்தில் "வேத அறிவியல்" என்று நம்முடைய  முன்னோர் நமக்கு வழங்கிய கொடையான வேதங்களை நம் இளையதலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். 

"பிற மொழியில் இருக்கும் நல்ல நூல்களை, தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும்" என்றரர் தேசிய கவி பாரதி, அதற்கேற்ப சமஸ்கிருதத்தில் இருக்கும் அறிவியல் கருத்துகளை தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும். 

சம்ஸ்கிருத அறிவியலை புறம் தள்ளிவிட்டு "பகுத்தறிவு" பேசி என்ன பயன் ?   

Tuesday, 8 July 2014

நாம் செய்யவேண்டிய "ஐந்து"

பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சமூக அக்கரைக் குறைவு என்ற வாதம் எழுகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் கடுமையாக உழைக்கவேண்டும், ஒரு பொறியியல் கல்லூரியின் முனைவர்பட்ட ஆய்வு (PhD) மாணவன் என்றமுறையில், இன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்யவேண்டிய "ஐந்து" செயல்களாக நான் நினைப்பது... 
  • தினந்தோறும் நாளிதழ் படிக்கவேண்டும். சமூக வலைதளங்களில், இந்த சமூகத்திற்கு ஏற்ற நல்ல கருத்துகளைப் பதிவிட வேண்டும். நம்மைச்  சுற்றி நல்ல கருத்துகள் உலவ வேண்டும். 
  • இந்தியாவின் வரலாறு, உலக நாடுகளின் வரலாறு, நம் தேசத்தலைவர்களின் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும்.
  • தினந்தோறும் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம், ஒரு பதினைந்து நிமிடமாவது நாட்டு நடப்புகளைப்பற்றி, அரசியல் நிகழ்வுகள் பற்றி  விவாதிக்க வேண்டும்.
  • சமூக சிந்தனை வேண்டும், நம்முடைய கல்லூரியிலோ, நகரிலோ, ஊரிலோ நல்ல சித்தனை கொண்ட ஒரு குழுவான மக்களோடு இணைந்து நம் பகுதியின் முன்னேற்றத்திற்குச் சமூக அக்கறையோடு செயல் பட வேண்டும்.நாட்டின் வளர்ச்சியில் நம்முடையப் பங்கும் இருக்க வேண்டும்.
  • நம்முடைய நேரத்தைப் பயனுள்ள விஷயங்களில் நம் முன்னேற்றத்திற்கு ஏற்றக் காரியங்களில் செலவிட வேண்டும். மக்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
    Engineering Students Social Duty

Wednesday, 25 June 2014

தமிழ் நம் அடையாளம்! ஹிந்தி இன்றைய தேவை !

அந்நிய மொழியாகிய ஆங்கிலத்திற்கு நாம் தரும் முக்கியதுவத்தை ஏன் நம் நாட்டு ஹிந்தி மொழிக்குத் தரக்கூடாது ? இந்திய மக்களாகிய நாம் நம் இந்தியாவின் பிற பகுதிகளில் பெருவாரியாக மக்கள் பேசும் ஒரு மொழியை ஏன் கற்கக் கூடாது ? பிற மாநிலங்களுக்கு தொழில், கல்வி, பயணம் ரீதியாக செல்லும் நமக்கு ஹிந்தி பயன்படும். இன்று தமிழ்நாட்டில் படித்த மாணவர்கள்,இளைய சமுதாயத்தினர் தமிழில் எழுதுவதில்லை, பேசுவதில்லை, காரணம் ஆங்கிலமோகம் ! ஒரு அந்நிய மொழியின் (ஆங்கிலம்) மீது மோகம் வரலாம்,அதை யாரு கேட்பதில்லை ! நாம் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, ஒரு மொழியைக் கற்பதனால் இன்னொரு மொழி அழியும் என்பதும் தவறு. 

பல மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியின் மூலம் மட்டும் அரசு, தன் அதிகாரப்பூர்வ செய்திகளை, தன் அரசு நடவடிக்கைகளை மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க,வெளியிட நினைப்பது தவறு. இணைப்பு மொழியாக பயன்படும் ஆங்கிலம் மூலம் அரசு தன் செய்திகளை தெரிவிக்கலாம்.

அவரவர்க்கு அவரவர் மொழி முக்கியம் !

தொன்மை வாய்ந்த தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் ! அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், சமூக வலைதளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும்.

Saturday, 17 May 2014

வாஜ்பாயின் கனவு திட்டமான நதி நீர் இணைப்பைப் புதிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றுவார ?

வருங்காலத்தில் இந்தியா சந்திக்கப்போகும் பிரச்சனைகளில்ஒன்றுமிக முக்கியமானதுகுடி நீர் பற்றாக்குறைஇதைத்தடுக்க நம்மிடம் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும்இதுவரை இல்லை.

நம் தமிழக முதல்வர் மரியாதைக்குரியசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின்  முந்தய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேமிப்பு திட்டம் ஒருவரப்பிரசாதமான திட்டம் , நிலத்தடி நீரை சேமிக்க ஒருசிறப்பான திட்டம்ஆனால் இது மட்டும் போதாதுநம்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர்,தண்ணீர்,பற்றாக்குறையைப் போக்க இந்தியாவில் உள்ள முக்கியநதிகளை இணைக்க வேண்டும்.


பெருந்தலைவர்மரியாதைக்குரிய அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின்ஆட்சிக் காலத்தில் யோசிக்கபட்ட "கங்கை காவிரி இணைப்புத் திட்டம் " செயல் படுத்தப்பட வேண்டும்இந்தியாஒன்றும் நீர் வளம் இல்லாத நாடு இல்லை,  


நம்முடைய உடம்பில் இருக்கும் நரம்புகளைபோல்இன்றியமையாதது நம்முடைய "தேசமாகியஉடம்பில்இருக்கும் நதிகள்இந்த நதிகளைப்  பாதுகாக்க வேண்டும்,வீணாகக் கடலில் சென்று கலக்கும் நதி நீரை ஒரு சிறுபகுதியை திருப்பி மற்ற நதிகளுடன் இணைத்து இந்தியாமுழுவதும் நதிகளை உலாவவிட்டு நம்முடைய நீர்ஆதாரத்தைப் பெருக்க வேண்டும்.


நதி நீர் இணைக்கப்பட்டால் பல நன்மைகள் உண்டாகும்குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் உயரும்சுத்தமான நீர்கிடைக்கும்,விவசாயம் செழிக்கும்,முக்கியமாக மக்களின்குடிநீர்ப் பிரச்சனை தீரும்,கோடை காலத்தில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படாது,கோடை காலத்தை சமாளிக்கும் அளவுநீர் வளம் பெருகும்கோடை காலத்தில் கூட விவசாயம்செழிப்பாக வளரும்.

ஆறுகளின் அவசியத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்"ஆறில்லா ஊர் பாழ்என்றனர்அனால் இன்றோ ஆற்றுநீரை நாம் பயன் படுத்தாமல் பாழ்படுத்திகொண்டுஇருக்கிறோம்.

மழை பொழியும் அளவு வேற ஆண்டிருக்கு ஆண்டுகுறைந்து கொண்டே வருகிறதுநிலத்தடி நீரும் வற்றிவருகிறதுஇந்த நேரத்தில் நதிகளை நாம் சரியாககையாளாவிட்டால் ஆபத்து நமக்குதான்நம்முடைய மக்கள்தொகைக்கு ஏற்றார் போல் நம்முடைய நீர்வளத்தைப்பெருக்க வேண்டும்இல்லையேல் இது பஞ்சத்தில் கொண்டுபோய்விடும்நீர் ஆதாரம் வற்றி வரும் வேளையில் நாம்கையில் இருக்கும் முக்கியமான நீர் ஆதாரம்வளம்நம்முடைய ஆறுகள் அதை வீணாக்கலாமா ?

அணைத்து நதிகளில் இருத்தும் ஒரு சிறு பகுதியை திருப்பிஒரு தேசிய நீரோட்டத்தை உருவாக்க வேண்டும் அந்தத்தேசிய நீரோட்டம் இந்தியா முழுவதும் பயணிக்க வேண்டும்,இது சாதாரண காரியம் அல்லமிகுந்த பொருட்ச்செலவும்,நேரமும் தேவைப்படும் எனினும் இதன் பலன்கள்மிகுதியானவைஇத்திட்டத்தை நாம் செய்துதான் ஆகாவேண்டும்.
நதிநீர் இணைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் காரியம்அல்லஅதற்குத் தெளிவான ஒரு கட்டமைப்புச் செயல்திட்டம் வேண்டும்தமிழகத்தில் போடப்பட்ட மழைநீர்சேமிப்புத் திட்டம்இந்தியா முழுவதும் செயல் படுத்தப்படவேண்டும்.
மோடி நதிநீர் இணைப்பை செயல் படுத்துவார?இல்லையேல் குடி நீருக்கும் வெளிநாட்டிடம்கையேந்தும் நிலை தான் வரும்.

பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை நிறைவேற்றுவார ?ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரையின் போது நரேந்திரமோடி அறிவித்தது போல கங்கை காவிரி நதி நீர்இணைப்பை செயல் படுத்துவாரகாலம் தான் பதில்சொல்லும்.     

Tuesday, 29 April 2014

வரப்போகும் புதிய அரசாங்கத்திடம் நான் வைக்கும் கோரிக்கைகள்/என் விருப்பம்...

இந்தியாமுழுவதும் சோலார் தகடு மூலம் மின்சாரம்.படிப்படியாக அனுமின்சாரத்தைக் கைவிடல். (Solar Energy).

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தொடர் மின்சாரம் வழங்குதல்.

தேசப் பாதுகாப்பில் தீவிர கவனம்.

முறையான பொருளாதாரக் கொள்கை.அண்டை நாடுகளுடன் எச்சரிக்கையாக இருத்தல், அவர்களுடன் நல்லுறவை வளர்த்தல்.

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கங்கை காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தல்.நாட்டின் நீர்வளங்களைப் பாதுகாத்தல்.நிலத்தடி நீர்மட்டத்தை உயர்தல்.

விவசாயத்திற்கு முன்னுரிமையளிதல்.வன வளங்களை,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்,அனைத்து மாநிலத்திலும் கட்டயமாக மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தல்.  

ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம், ஊழலில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை.

பிளாஸ்டிக் பொருட்களின் மீது கவனம் செலுத்தி, அதன் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.  

தமிழக மீனவர் நலனில் அக்கரை, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உறுதியான முடிவு, அவர்களின் வாழ்வாதாரத்தில் அக்கரை செலுத்துதல்.

பரிவழகன்