Thursday, 16 August 2018

வாழ்க அடல் ஜி யின் புகழ் ! - Atal Bihari Vajpayee - Deep Condolence

பாரதத்தின் பாசத் தலைவனை, 
நெறிபிறழா நேர்மையாளனை,
கார்கிலை வென்றெடுத்த தேசத்தின் காவலனை, 
தங்க நாற்கரச் சாலை தந்த தலைமகனை, 
பார்போற்றும் தேசியவாதியை, 
ஈடு இணையற்ற இலக்கிய வாதியை,  
ஒப்பற்ற ஒழுக்கசீலனை,
மக்களின் தலைவனை,
தொண்டர்களின் வழிகாட்டியை,
ஜன சங்கத்தின் ஜீவாத்மாவை,
பாரதத்தின் பொக்கிஷத்தை,

இன்று இழந்துவிட்டோம் 
வாழ்க அடல் ஜி யின் புகழ் !
என்றும் அவர் வழி நடப்போம் 

அ.பரிவழகன்  

Thursday, 2 August 2018

ஆடிப் பெருக்கு ! ஆறுகளைப் போற்றுவோம் ! - Aadi Peruku - The day to Celebrate our Rivers

மனித சமூகம் தோன்றிய காலம் முதல் ஆறுகளே மனித சமூகத்தை மேம்படுத்தின, ஆற்றங்கரை நாகரிகமே உலகின் முதல் வாசல் !. அன்று முதல் நாம் ஆறுகளை வணங்கி, கொண்டாடி வருகிறோம். நம் பாரத நாகரிகத்தில் அனைத்து ஆறுகளுக்கும் பெண் தெய்வங்களின் பெயர்களை வைத்து தேவியரின் அம்சமாகவே வணங்குகிறோம். கங்கை, காவேரி , யமுனை என அனைத்தும் பாரத அன்னையின் பரிணாமங்கள். இன்று ஆடிப்பெருக்கு ஆறுகளைக் கொண்டாடும் நாள், நமக்கு உணவு, விவசாயம், நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் முறை, குடும்ப அமைப்பு, நகர அமைப்பு, வழிபாடு என அனைத்தும் அளித்துக் காத்து வரும் ஆறுகளை வணங்குவோமாக.

நீர் உலகின் அடிப்படை, எனவே
நீர் நிலைகளைப் பாதுகாப்போம்!  

அ.பரிவழகன்  

Saturday, 9 September 2017

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய 125 ஆம் ஆண்டு - Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary

நாளை (11.09.2017) சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிகாகோவில் நம் பாரதம் பற்றியும் இந்துமதம் பற்றியும் உரை நிகழ்த்திய 125 ஆம் (1893 - 2017) ஆண்டு பெரு நிகழ்வு ! 
Swami Vivekananada America - Chicago Talk 125 th Anniversary (11.09.1893)

இந்நேரத்தில் நாம் இரண்டு தமிழர்களை நினைவில் கொள்ள வேண்டும் ...
தனக்கு வந்த அழைப்பை சுவாமி விவேகானந்தரிடம் கொடுத்து தனக்கு பதில் அமெரிக்காவில் நடக்கும் சர்வ சமய மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்றும், அதற்கு பொருளுதவியும் செய்த ராமநாதபுரம் மன்னர் திரு.பாஸ்கர சேதுபதி !

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க செல்ல பலரிடம் பொருளுதவி பெற்றுத்தந்த திரு.அளசிங்கர் ! , அளசிங்கர் விவேகானந்தருக்கு பல்வேறு உதவிகளை மிகுந்த அன்போடு செய்தவர். விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து அளசிங்கருக்கு எழுதிய கடிதம் இன்றும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கல்வெட்டாக காட்சிக்கு உள்ளது !
அ.பரிவழகன்

#SwamiVivekananadaChicagoTalk125thAnniversary


Sunday, 30 April 2017

Sri Sankara - Sri Ramanuja Jayanthi !

இன்று ஸ்ரீ சங்கர - ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி !

நம் ஹிந்து சனாதன தர்மத்தின் இரு கண்கள் இவர்கள், சங்கரர் பிரிந்து கிடந்த ஹிந்து சமூகத்தை ஒன்று படுத்தியும், ராமானுஜர் நம் சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளை நீக்க போராடியும், நம்
நாட்டிற்கு அரும் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களுக்கு நம் இதயப் பூர்வமான நன்றிகள்
வணக்கங்கள்.