Saturday 31 October 2015

சனாதன தர்மம் - 9 - இந்து தர்மக் கோவில்களும் – தமிழக திராவிட அரசுகளும் – அ.பரிவழகன் – Hindu Temples and Tamilnadu Dravidian Governments


கடவுள் மீது நம்பிக்கையில்லாத கட்சிகளின் அரசுகள் நம் இந்துதர்மக் கடவுள்களின் கோயில்களை நிர்வகிப்பது சற்று விசித்திரமானது, குறிப்பாக திராவிட கட்சிகள். தமிழகத்தில் தீவிர இந்து விரோதப்போக்கை மேற் கொண்ட கட்சிகள் கோவில் நிர்வாகத்தை மட்டும் கைவிடவில்லை காரணம் உண்டியல் !, வருமானம். என்னதான் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறினாலும் ‘உண்டியல் வருமானம் தேவையில்லை’ என்று அவர்கள் கூறியதில்லை. “கோவிலில் இருந்து கிடைக்கப் பெறும் பெருச்செல்வம் அரசுக்கு வருவாய்; நாமோ அதை ஆண்டவனுக்கு அளிக்கும் காணிக்கை என்று நம்புகிறோம்” 
  
கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கும், மதச்சார்பற்ற அரசு என்று கூறுபவர்களுக்கும், எதற்கு நம் கோயில் வருமானம் ? சாமியைத் திட்டி ; பக்தனிடம் காசைப் பிடுங்கும் கூட்டம் இது. சரி ஆலயத்தையாவது ஒழுங்காக பராமரிக்கிரார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒரு தனியார் தமிழ் நாளிதழலின் (தினமலர்) இணையதளத்தில் சேகரித்து வைக்கபட்டிருக்கும் கோவில்கள் , இந்து தர்மம் பற்றிய அறிய தகவல்கள் கூட தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் இல்லை. கோவில்களில் இருந்து கிடைக்கபெறும் பெரும் வருமானத்தை அரசு கோவிலின் வளர்ச்சிக்கு, பக்தர்களின் வசதிக்கு, இந்து சமய வளர்ச்சிக்கு, மேம்பாட்டிருக்கு முழுமையாக செலவு செய்ய வேண்டும், மாறாக அரசின் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ; விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று கூறுபவர்கள், ஏன் கோவில் வருமானத்தை அரசு எடுக்ககூடாது என்று கூறுவதில்லை ? கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்து கடவுள்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாதா ?.இந்து தர்மம், இந்தக் கலாச்சாரத்தின் தர்மம், இம்மண்ணின் தர்மம், நம் கடவுளை அரசு அலுவலகங்களில் வைக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் ?

கோவில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட்டு வந்த அரசு இன்று கோவிலின் அன்றாட சடங்குகளில், பூஜைகளில், விழாக்களில் தலையிடுகிறது. ஆலயங்களின் சடங்குகள், விழாக்கள் போன்றவை அந்த அந்த கோவிலின் குருக்கள், பூசாரிகள், சமயப் பெரியோர்கள், மடாதிபதிகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அனால் இன்று அரசின் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு கும்பாபிஷேகத்திற்கும், தேரோட்டத்திற்கும் நாள் குறிக்கின்றனர். கோவில் குளங்களும், நிலங்களும் புல், புதர் முளைத்துக் குப்பை மேடுகளாகக் கேட்ப்பாற்றுக் கிடக்கின்றன...

அர்ச்சனைக்குக் காசு ; ஆண்டவனை அருகில் தரிசிக்கக் காசு ; உண்டியலுக்குக் காசு ; சிறப்பு தரிசனம் ; அன்னதானம் ; கோவில் விழா என அணைத்திற்கும் காசு வசூலிக்கும் அரசு இந்து தர்மத்திற்கு ; கோவிலுக்கு ; பக்தர்களுக்குத் திருப்பி செய்த கைம்மாறு என்ன ? கோவிலில் பணத்தைக் கொட்டும் மக்களுக்கு அதை அரசு என்ன செய்கிறது என்று கேட்ப்பதற்கும் உரிமையுண்டு. அரசைப் பொறுத்தவரையில் கோவில்கள் முதலீடு இல்லாது வருவாயைக் கொட்டும் ஸ்தாபனங்கள்.  

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் இருக்கும் சிறப்பான ஏற்பாடுகள் உலகறிந்தவை ,பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் ஏராளம், திருப்பதி தேவஸ்தானம் உலகின் பல இடங்களில் திருப்பதி கோவில் போன்று சிறிய வடிவில் கோவில்களை, திருப்பதி கோவிலின் தகவல் மையங்களை அமைத்து திருப்தி ஏழுமலையானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. [உதாரணம் : சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில்] இப்படி இந்து சமய சேவையை சிறப்பாகவும், விரிவாகவும் செய்யும் திருப்தி தேவஸ்தானமும் அரசு சார்புடையது தான்.

நம் தமிழ்நாட்டில் புராதனமான , பழமையான பல கோவில்கள் இருந்தும் போதிய வசதிகள் இல்லாமல் இருகின்றன, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, திருநெல்வேலி என ஊருக்கு ஒரு பெரிய கோவிலை வைத்துக் கொண்டு அவற்றை முறையாகப் பராமரிக்காமல் வைத்திருப்பது யாருடைய தவறு?   
         
கோவில்கள்தான் நம் கலாச்சாரத்தின் அடிப்படை நம்மைப் பொருத்தவரையில் அவை வழிபடும் இடம் மட்டுமல்ல நம் வாழ்வோடு பிணைந்த கலாச்சாரத்தின் விழுமியங்கள், அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை.

கோவில் சொத்தைச் சூரையாடினால் 
கோவிலின் வளங்களைக் கொள்ளையடித்தால்
கோவிலின் புனிதத்தைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டால்

அதற்கான தண்டனையை ஆண்டவன் நிச்சயம் கொடுப்பான் ! 

Wednesday 21 October 2015

சனாதன தர்மம் - 8 - “ஸ்ரீ மத் பகவத்கீதை” நம்முடைய புனித நூல் - அ.பரிவழகன் - ! “Srimad Bhagavad Gita” is Our Holy Book

நம் சனாதன தர்மத்தின் கடவுளர்களைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நூலும் ஒன்றைப் போதிக்கிறது; ஓர் உயர்ந்த நெறியைக் கற்றுக் கொடுக்கிறது; ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒரு நூல் புனிதமானது; ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒரு நூல் முக்கியமானது அப்படி இருக்க நம் அனைவருக்கும் பொதுவான நூல் என்று எதைக் கூறுவது ? ஒவ்வொரு மொழியிலும் நம் கடவுள்களைப் போற்றி எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன, ஆகையால் பொதுவான நூல் என்று எதைக் கருதுவது ?
சைவம் (சிவன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), காணபத்தியம் (விநாயகர் வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு), என நமக்குப் பிரதானமாக இருக்கும் ஆறு வழிபாட்டு முறைகளுக்கும் பொதுவாக விளங்குவது நான்கு (4) வேதங்கள், ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய இந்த நான்கு வேதங்களும் அனைத்து வழிபாட்டிற்கும் பொதுவானவை, நம்முடைய ஆறு வழிபாட்டு முறைகளிலும் இந்த நான்கு வேதங்களும் பயன்படுத்தப் படுகின்றன, எனவே இவை அனைவருக்கும் பொதுவானவை. ஒரு தனிப்பட்ட மனிதன், ஓர் எளிய மனிதன் என்று எடுத்துக் கொண்டால் அவனால் இந்த நான்கு வேதங்களையும் படிப்பது என்பது சற்று கடினம், எனவே இந்த நான்கு வேதங்களின் சாரமாக விளங்கும், நான்கு வேதங்களின் கருவாக விளங்கும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய, “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் படிப்பது எளிது. ஆகவே தான் நம் முன்னோர் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யை நம் புனித நூலாகப் பின்பற்றினர், நான்கு வேதங்களின் சாரமாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” விளங்குவதால் அதுவே நம்முடைய புனித நூல் !   

வேதங்களில் பல பகுதிகள் மறைந்துபோய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கபட்டிருக்கின்றன. உபநிஷதங்கள் எல்லாம் நான்கு வேதங்களில் இருந்து வந்தவை, உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை, எல்லா உபநிஷதங்களின் சாரமும் இதில் இருக்கிறது. உபநிஷதங்களைப் பசுக்கள் என்று வைத்துக்கொண்டால் பகவத்கீதையைப் பால் என்று பகரலாம், பகவத்கீதையை பகவத்கீதா உபநிஷதம் என்றும் அழைக்கலாம். எல்லோருக்கும் எளிதில் விளங்காத உபநிஷதங்களை, எளியோர்க்கும்  விளங்கும்படி எளிமையாக பகவத்கீதை என்று செய்து வைத்தான்   கண்ணன் !    
                                        
அனைத்து வேதாந்தக் கருத்துகளையும், அனைத்து ஞான விளக்கங்களையும், அனைத்துத் தத்துவங்களையும், ஒப்பற்ற நெறிமுறைகளையும், அற சிந்தனைகளையும் விளக்கும் நூல் “ஸ்ரீ மத் பகவத்கீதை” [பகவத்கீதை என்பதற்கு பகவானின் கீதம், கடவுளின் பாடல் என்று பொருள்] எல்லாவற்றிற்கும் மேலாக “ஸ்ரீ மத் பகவத்கீதை” “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா”வால் இவ்வுலக ஜீவராசிகள் இன்புற்று வாழ வாரி வழங்கப்பட்ட அருளமுதம் !

நம்மால் (தமிழர்களால்) விரும்பப்படும் ஒரு நூலை, மற்ற மொழியினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், கன்னடர்கள் விரும்பும் நூலை மலையாளிகளும், தெலுங்கர்கள் விரும்பும் நூலை மராட்டியர்களும், அசாமியர்கள் விரும்பும் நூலை குஜராத்தியர்களும், ஹிந்தி பேசும் மக்கள் விரும்பும் நூலை மற்ற மொழிக்காரர்களும், மற்ற மொழிக்காரர்கள் விரும்பும் நூலை ஹிந்திக்காரர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படி ஒவ்வொருவரும் மற்றவரின் நூலைத் தவிர்த்துவிட்டு, தங்களின் நூலே புனித நூலக வர வேண்டும் என்று விரும்புவர். ஆனால் அதேசமயம் நான்கு வேதங்களையும் அனைவரும் ஏற்றுக் கொள்வர், நம் பாரதம் முழுவதும் நம்முடைய கோவில்களின் வழியாக சமஸ்கிருதம் அனைவரையும் இணைக்கிறது, கலாச்சார ரீதியாக சமஸ்கிருதம் ஓர் இணைப்பு மொழி போல செயல்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மொழியில், கோயில்களில் பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன, அதே சமயம் நம்முடைய நான்கு வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும், சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒழுங்கு முறை போல, நம் பாரதத்தில் சமஸ்கிருத மொழியில் ஒலிக்கும் “சுப்ரபாதம்”தான் உலகம் முழுவதும் ஒலிக்கிறது.

அண்டை மாநிலங்களின் மொழிகளில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நாம் ஏற்றுக்கொள்வோமா ? இல்லை நம்முடைய தமிழ் மொழியில் உள்ள ஏதேனும் ஒரு புனித நூலை நம் அருகில் உள்ள கேரளா, கர்னாடக, ஆந்திரா ஏற்றுக்கொள்ளுமா ? இது சந்தகமே.  ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் எண்ணற்ற ஞான நூல்கள் இருக்கின்றன, அதில் ஏதேனும் ஒன்றை “புனித நூல்” என்று அறிவித்தால் மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால் தான் ஆறு பிராதன வழிபாட்டு முறைகளுக்குப் பொதுவான நான்கு வேதங்களை எடுத்துக் கொண்டு, நான்கு வேதங்களின் சாரமான “ஸ்ரீ மத் பகவத்கீதை” சனாதன ஹிந்து தர்மத்தின் புனித நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 

ஒட்டுமொத்தமாக அனைத்து இந்துக்களும் “ஸ்ரீ மத் பகவத்கீதை”யைப் புனித நூலாக ஏற்றுக்கொள்கின்றனர், காரணம் அது அனைத்து வேதங்களின் சாரமாக விளங்குகிறது !

“ஆன்மீகமே பாரதத்தின் முதுகெலுன்பு, அதுவே நம் நாட்டை 

ஒருங்கிணைக்கும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

Saturday 10 October 2015

சனாதன தர்மம் - 7 - இந்து தர்மம்: தமிழ் மொழியும் எளிய மனிதர்களும் – அ.பரிவழகன் – Hindu dharma : Tamil language and Common Man

எண்ணிலடங்காத வழிமுறைகளையும் புனித நூல்களையும் அதனைத் தொடர்ந்து எண்ணற்ற ரிஷிகளையும், குருமார்களையும் கொண்டது நம் சனாதன தர்மம். ஒவ்வொரு இறை வழிபாட்டிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பழக்கவழக்கதிற்கும் ஒரு நூல், ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும் ஒரு நூல். இப்படி எல்லையற்ற வழிமுறைகளைக் கொண்ட நம் இந்து தர்மத்திற்கு வழிகாட்ட எல்லையற்ற தத்துவங்கள் அவற்றை விளக்க எண்ணிலடங்கா நூல்கள்.

“ஒரே ஒரு நூல், ஒரே ஒரு கடவுள்” என்ற வழிமுறை இங்கு கிடையாது, அதற்கு மாற்றாக “எண்ணிலடங்கா ஞானப் பொக்கிஷங்கள், எண்ணிலடங்கா கடவுளர்கள்” என்ற முறையே நம் வழிமுறை. இதுவே நம் கலாச்சாரத்திற்கு ஏற்ற முறை. “பிறருக்கு ஏற்றது, நமக்கு நஞ்சாகலாம்” என்கிறார் சுவாமி விவேகானந்தர், ஆகா பிற நாடுகளுக்கு ஏற்ற வழிபாட்டு முறை நமக்கு சரிவராது.

நம்முடைய தமிழ் மொழியில் நம் பாரத கலாச்சாரத்தின் ஹிந்து கடவுளர்களைப் போற்றி, புகழ்த்து பல ஞானப் பொக்கிஷங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியில் பக்தி இலக்கியங்களின் பங்கு மிகப் பெரியது, பக்தி இலக்கியங்களை விட்டு விட்டு தமிழ் மொழியைப் பார்த்தால் அது வெறும் எழும்புக்கூடு போல தான் இருக்கும், பக்தி இலக்கியங்கள் தான் நம் தமிழ் மொழிக்கு அழகையும், வசீகரத்தையும், ஞானத்தையும், பெருமையையும், கம்பீரத்தையும் தருகின்றன. முற்காலத்தில் நம் முனிவர்கள், அறிவுஜீவிகள் கடவுளைப் போற்றிப் பல பாடல்களை இலக்கிய வடிவில் இயற்றி நம் தமிழுக்கும் இறைவனுக்கும் ஒரு சேரத் தொண்டாற்றியுள்ளனர். பக்தி இலக்கியங்கள் நம் தமிழ் தாய்க்கு ஜீவன் போன்றது.

பன்னிரு திருமுறைகள் (தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம்), கம்பராமாயணம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்யப்ரபந்தம் என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). திருக்குறள் நம் சனாதன தர்மத்தின் கலாச்சாரத்தில் தோன்றிய அறநூல், பிற்காலத்தில் அதை உலகப்பொதுமறை என்று அனைவரும் ஏற்றுக் கொண்டது நம் தமிழ் மொழிக்கும், நம் ஹிந்து கலாச்சாரத்திற்கும் பெருமையே !

நம் பாரத திருநாட்டில் இருக்கும் ஒவ்வொரு மொழியிலும் எண்ணற்ற நூல்கள் நம் கலாச்சரா கடவுளர்களைப் போற்றி பெருமளவில் இருகின்றன. நம் பரந்துபட்ட பாரதத் திருநாட்டில் இருக்கும் பல மொழிகளில் நம் ரிஷிகள், முனிவர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், புலவர்கள், எனப் பலரும் தங்களுடைய அறிவாற்றலின் காரணமாக தெய்வத்தின் துணையோடு தங்களின் தாய் மொழியில் நம் சனாதன இந்து கடவுளர்களைப் புகழ்ந்து, போற்றி பல பாடல்களை, இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

கிராம தேவதை வழிபாடு, கிராம தெய்வங்களின் வழிபாடு, கிராம கடவுளர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய நாடுப்புறப்பாடகள் நம் பாரதம் முழுவதும் மிகவும் பிரபலம். கிராமத்து மக்கள், எளிய மக்கள் தங்களின் விருப்பமான கடவுள்களைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் ஏராளம், அவை ஏட்டில் எழுதப்படவில்லை, வாய்மொழியாகவே பாடப்பட்டன, பரப்பப்பட்டன.

காளியம்மன், மாரியம்மன், முத்துமாரி அம்மன், பவானி அம்மன், சீலக்காரி அம்மன், இராணி அம்மன், அய்யனார் சாமி, இருளப்பன் சாமி, கருப்ப சாமி, சுடலை மாட சாமி, மதுரை வீரன் சாமி, முனீஸ்வரன் சாமி, என இப்படியல் நீளும் (இவை சில மட்டுமே). இக்கடவுளர்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்களே, இவை நம் கிராமத்து எளிய மக்களை நம் கலாச்சாரத்தின் மீதும், நம் தர்மத்தின் மீதும் மிகுந்த ஈடுபாட்டோடும், பற்றுதலோடும், பக்தியோடும் இருக்க வைத்திருகின்றன . எளிய மக்களின், எளிய பாடல்கள் அவர்களின் தூய்மையான அன்பு இன்றும் தொடர்ந்து ஆண்டவனை அன்பால் மகிழ்விக்கின்றன. [உதாரணம்: நாடகத் தமிழ் உலகின் இமயமலை எனப்பாரடப்படும், பாமரர்களின் பழங்கதைகளை நாடகமாக்கிய “சங்கரதாசு சுவாமிகள்” (1867-1920), சில நாடகங்கள்: வள்ளி திருமணம், பக்தப் பிரகலாதா, இலவகுசா ]

நம் பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலும், மொழியிலும், எளிய மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பாடல்கள் பரந்து விரிந்து காணக் கிடைகின்றன. இம்மண்ணோடு மண்ணாக அவர்களின் பாடல்கள் கலந்து, இம் மண்ணுக்கு வலிமையைத் தருகின்றன. எளிய மனிதர்களின் வலிமையான தொண்டுதான் இன்றும் நம் இந்து தர்மத்தைக் காக்கின்றது. போற்றுவோம் அவர்களின் தொண்டினை !


நம்முடைய கலாச்சாரத்தின் காவலர்கள் நம் மன்னர்கள், ரிஷிகள் மட்டும் அல்ல, நம்முடைய குடும்பங்களும் அதில் வாழ்த்த எளிய மனிதர்களும் தான், அவர்கள் பல அறிய பெரிய சேவைகளை பெயர் கூறாது திறம்பட செய்துள்ளனர். அவர்களுக்கு என்றென்றும் நம் வணக்கங்கள், நன்றிகள் ! என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

Saturday 3 October 2015

சனாதன தர்மம் - 6 - திராவிடக் கட்சிகளும், சாதிய அரசியலும் - அ.பரிவழகன் – Dravidian parties and Caste politics


நம் தமிழ்நாட்டில் இரண்டு விதமான அரசியல் பேசப்படுகின்றன ஒன்று பாரதம் தழுவிய தேசியம், இரண்டு திராவிடம் சார்ந்த இனவாதம். இதல் தேசியம் என்பது பாரதத்தின் அனைத்து மக்களையும் இணைக்கும் தேசிய நீரோட்ட அரசியல், திராவிட இனவாத அரசியல் தொடங்கப்பட்ட காலத்திலேயே தத்துவார்த்த ரீதியில் பொய்த்துப் போய்விட்டது. இருப்பினும் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அரசியல் மேடைகளில் மட்டும் வாழ்கிறது, சமூக தளத்தில் என்றோ பொய்த்துவிட்டது.  

சமூகச் சூழலில் யாரும் இன்று திராவிடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வந்த வாரிசுகள் இன்று திராவிடம் என்றால் என்ன ? என்று கேட்கின்றனர். "தமிழுக்காக" இந்தியைத் திட்டியவர்களின் பிள்ளைகள் இன்று ஆங்கிலக் கல்விமுறையில் இந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கின்றனர். கடவுளைத் திட்டியவர்கள், குறிப்பாக இந்துமத வழிபாட்டைத் திட்டியவர்கள் , கேலிபேசியவர்கள் இன்று ஏறாத கோயில் இல்லை, செய்யாத வழிபாடு இல்லை, பார்க்காத ஜோதிடர் இல்லை. திராவிடத்தின் அடிப்படைக் கொள்கையாக அவர்கள் சொல்வது சாதி ஒழிப்பு, ஆனால் "திராவிட"க் கட்சிகளின் ஆட்சியில் தான் சாதி அமைப்புகள், சாதி சங்கங்கள் தோன்றி, வளர்ந்து, செழித்து, ஆட்சியில் யார் அமர வேண்டும், யார் அமைச்சராக வரவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றன.    

சுய மரியாதைத் திருமணம் மூலமாக, சாதி விட்டு சாதி திருமணம் செய்வதன் மூலம் சாதியை ஒழிக்கலாம் என்றனர், ஆனால் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் தங்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது கணவர் எந்த சாதியோ அதே சாதியில் தான் பிள்ளைகளைப் பதிவு செய்தனர், செய்கின்றனர். சாதி தேவையில்லை என்ற ஒரு பிரிவு இருகின்றது அதில் இவர்கள் தங்களின் பிள்ளைகளைப்  பதிவு செய்யாதது ஏன் ? யார் யார் எல்லாம் சாதி ஒழிய வேண்டும் என்று அரசியல் மேடைகளில் பேசுகிறார்களோ, அவர்கள் எல்லாம் முதலில் தங்களின் பிள்ளைகளை, பேரன்களைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது எந்த சாதியையும் சாராதவர், சாதி தேவயில்லை என்று பதிவு செய்யத் தயாராகல்லூரிகளிலும், அரசு நிறுவனங்களிலும் "எந்த சாதியையும் சாராதவர்" என்று தனியாக சாதி சாராதவர்களுக்கு இட ஒதிக்கீடு கொண்டு வரத் தயாரா ?

சாதி ஒழிப்புப் பற்றி பேசும் திராவிடக் கட்சிகள் இதுவரையில் சாதி ஒழிப்பிற்குச் சட்ட ரீதியாகச் செய்த நடவடிக்கைகள் என்ன ? நடைமுறைப் படுத்திய சட்டங்கள் என்ன ? சமூகப் போராட்டம் என்று மக்களைத் திரட்டும் இவர்கள் சட்ட ரீதியில் சாதியை எதிர்க்காமல் மக்களை ஏமாற்றுகின்றனர்

ஒருவர் நினைத்தால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு எளிதாக மாறிவிட முடியும், ஆனால் ஒரு சாதியில் இருந்து இன்னொரு சாதிக்கு மாற முடியாது. ஆகா மதத்தை விட வலிமையானது சாதி, அப்படிப்பட்ட சாதியை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யாத "திராவிடர்கள்" தான், இந்து மதத்திற்கு எதிராகப் போராடுகின்றனர்.

இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள் இன்றும் தங்களின்  சாதிய அடையாளங்களுடனேயே இருகிறார்கள். மேலும் தாங்கள் புதிதாக ஏற்றுக்கொண்ட மதத்தில் உள்ள பிரிவுகளிலும்பழக்கவழக்கங்களிலும் ஈடுபட்டு, பழைய சாதிய அடையாளத்தையும் சுமந்து கொண்டு குழப்பத்தில் இருகின்றனர். மதம் மாறியவர்கள் இன்னமும் சாதியைத் தொலைக்கவில்லை என்றால் அதற்கும் இந்து மதம் தான் காரணமா ? இப்படி மனிதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற சாதியை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்து தர்மத்தை எதிர்க்கின்றனர். காரணம் - இந்து தர்மம் மனிதனை நான்கு விதமாகப் பிரிக்கின்றது என்று நம் தர்மத்தின் மீது குறை கூறுகின்றனர்.     

இந்து தர்மம் சொல்லக் கூடிய நான்கு வர்ணங்களுக்கும் இன்றை நடைமுறையில் உள்ள சாதிப் பிரிவினைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சாதிய உருவாக்கத்திற்கு மனித மனோபாவமே காரணம் கடவுள் அல்ல, மனிதனின் தவறுக்குக் கடவுள் எப்படி, கலாச்சாரம் எப்படி காரணமாக முடியும் ? இன்று நம் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் சாதிகள் இருக்கின்றன அதற்கு இந்து கடவுளா காரணம் ?   (விரிவாகப் பார்க்க -  பாரதத்தின் சாதிய முறை - http://parivazhagan.blogspot.in/2015/09/5-1-caste-system-in-india-1.html)

இனிமேலாவது சாதி ஒழிய வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்கள், சாதிக்கு எதிராகப் பேசுபவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயலாற்றினால் நல்லது, மாறாக இந்து தர்மத்தை குறை கூறி பிழைப்பு நடத்தினால், அரசியலில் , சமூகத்தில் தோல்வியைத் தழுவுவது நிச்சயம். Read more - http://parivazhagan.blogspot.in/2015/07/blog-post.html