Vasudhaiva Kutumbakam
இதைச்
செய் ; இதுதான் சரி ; இது
மட்டுமே உண்மை; இவரே கடவுள்
; இது ஒன்றே வழி; என்று
யாரையும் வற்புறுத்தியது இல்லை நம் சனாதன
தர்மம். உன்னுடைய விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டு விடுகிறது. நீயே
உன் இஷ்ட தெய்வத்தை ; நீயே
உன் விருப்பமான வழிபாட்டு முறையை தேர்வு செய்து
கொள் என்கிறது.
எந்த
ஒரு அதிகார பீடமோ ; ஒரு
குடையின் கீழ் அனைவரும் வர
வேண்டும் என்ற கட்டளையோ இங்கு
கிடையாது , உன் விருப்பத்திற்கு எத்தனை
கடவுளை வேண்டுமானாலும் வணங்கலாம். பரந்து பட்ட விருப்பத்தேர்வை
இது தருகிறது. ஞான நூல்களுக்கோ; உடல்-ஆன்மா சார்ந்த விளக்கங்களுக்கோ;
உயரிய கோட்ப்பாடுகளுக்கோ இங்கு பஞ்சமேயில்லை.
வேதங்கள்
; வேதாந்தங்கள்; இதிகாசங்கள் ; புராணங்கள்; புனிதர்களின் வாழ்க்கை முறைகள்; தெய்வீக மனிதர்களின் - மனித
தெய்வங்களின் உயரிய வாழ்வியல் தத்துவங்கள்;கலாச்சார வலிமை ; பண்பாட்டுச்செழுமை ; பெண்மையின்
பெருமை; நாகரிகத்தின் வல்லமை ; அறிவியலின் அரசாட்சி ; கணிதவியலின் கட்டுமானம் ; மன்னர்களின் மான்பு ; மக்களின் பண்பு ; அரசியலில் நேர்மை
என எத்தனையோ எண்ணிலடங்காத வல்லமை பெற்றும் தன்
கலாச்சாரத்தை ; தன் தர்மத்தைப் பரப்புவதற்காக
பிற தேசங்களை ; மற்ற நாடுகளை “ஆக்கிரமிக்காத,
கைப்பற்றாத உயரிய
; புனித ஆன்மா நம் பாரதத்
தாய் !” நாம் இதுவரையில் மதத்திற்காக
; பணத்திற்காக ; அதிகாரத்திற்காக ; நிலத்திற்காக எந்த நாட்டையும் ஆக்கிரமித்தது
கிடையாது.
இந்த
தேசத்தின் அடி நாதமாக விளங்குவது
"ஆன்மீக வாழ்வே" ; ஆன்மீகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது,
சனாதன தர்மத்தை புறக்கணித்து விட்டு இங்கு எதையும்
செய்ய முடியாது என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த
அற்புத தர்மமானது நமக்கு மிகப் பரந்த
மனப்பான்மையை வழங்கி இருக்கிறது; அனைத்து
மதங்களையும் ; அனைத்து விதமான வழிபாட்டு
முறைகளையும் அரவணைத்துக் கொள்ளும் ஓர் உயரிய நேர்மறையான பலத்தை நமக்கு அளிக்கிறது.
எனவே தான் நாம்
"வசுதைவ குடும்பகம்"
(உலகே ஒரு குடும்பம்)- (மகோ
உபநிடதம்) Mahopanishad VI.71-73;
"யாதும் ஊரே
யாவரும் கேளீர்-கனியன் பூங்குன்றனார்";
"ஒன்றே குலம்;
ஒருவனே தேவன்-திருமூலர்"
''உலகம்
யாவையும் தாமுளவாக்களும்-கம்பர்"
"யான் பெற்ற
இன்பம் பெருக இவ்வையகம்" என்றோம்
தான்
செய்யும் ஒவ்வொரு செயலிலும் ; தொழிலும்
; கடவுளை இணைத்து ,தெய்வீகத்தைத் துணைக்கு அழைத்துச் செயல் செய்யும் கலாச்சாரம்
நம்முடையது. புதியதாக வாங்கிய கணிணியையோ ; வாகனத்தையோ
தொட்டு வணங்கும் பழக்கம் நம்முடையது. இது
மூட நம்பிக்கையல்ல, நமக்கு உதவும் பொருட்களுக்கு
நாம் தரும் மரியாதை. ஆயுத
பூஜையின் நோக்கம், நமக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் மதிப்பது; வணங்குவது !
"உயிரினங்களை மட்டுமல்ல
; உயிரற்ற பொருட்களையும் மதிக்கும் கலாச்சாரம் இது"
மாத,பிதா,குரு,தெய்வம்
என்ற முறையில் வந்து அனைத்தையும் வணங்கும்
நாடு இது; அனைவரையும் நேசிக்கவும்
; அரவணைக்கவும் இங்கு எந்தத் தடையும்
இல்லை. இங்கு உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு
மனிதர்கள் தான் காரணமே தவிர
; இந்த கலாச்சரம் அல்ல ! புனிதமான
ஜீவா நதி நம் சனாதன
தர்மம் !
No comments:
Post a Comment